நாடு முழுவதிலும் கடந்த 17ஆம் திகதி திடீரென மதுபானசாலைகள் திறக்கப்பட்டதால் மது மருந்திவிட்டு மோதிக்கொண்ட பலர் இன்றுவரை பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Advertisement -
அதன்படி மது மருந்திவிட்டு மோதில்கொண்ட சம்பவத்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 175 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -
இதேவேளை இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் ஐவர் பெண்கள் என்பதோடு அவர்கள் அனைவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது.
அந்தவகையில் பொறளையில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதுடன், அவிசாவளை தய்கல பிரதேசத்தில் மனைவியை குடித்துவிட்டு தாக்கியவரை மனைவி திருப்பித் தாக்கியதில் கணவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் மதுபானசாலை திறக்கப்பட்டு உடனடியாக வாங்கிப்பருகிய மது காரணமாக பதிவாகியிருக்கின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.