கொழும்பின் புறநகர் பகுதியில் நபர் ஒருவரின் மனிதாபிமான செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பாணந்துறை பிரதேசத்தில் கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்களை இலவசமாக தங்கள் ஜீப் வண்டியில் வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து சென்று ஒருவர் உதவி வருகிறார்.
- Advertisement -
60 வயதுடைய வர்த்தகரான சஹஸ்ரவிஜித்த என்ற நபர் கடந்த 4 நான்கு நாட்களாக இந்த மனிதாபிமான செயலை செய்து வந்துள்ளார். தனது உயிரை பணயம் வைத்து பாதிக்கப்பட்ட நபர்களை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார்.
- Advertisement -
காலை இரவு பாராமல் கிடைக்கும் அனைத்து அழைப்புகளுக்கும் 24 மணித்தியாலங்களும் சேவை வழங்கும் நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார். அவரது மனைவியான குமாரி விஜிதா அவருக்கு செய்யும் உதவி மிகப்பெரியதென அவர் குறிப்பிட்டுள்ளார். கொவிட் பரவலின் போது அச்சத்தில் வீடுகளில் முடங்கியிருக்கும் மத்தியில் தனது உயிரை பயணம் வைத்து இந்த நபர் செய்யும் சேவையை பலரும் பாராட்டியுள்ளனர்.