யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸ் விடுதியில் இருந்து பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அனுராதபுரத்தை சேர்ந்த சார்ஜெண்ட் ஜயசேகர (வயது 45) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
குறித்த நபர் நேற்றைய தினம் இரவு உறக்கத்திற்கு சென்ற நிலையில் , இன்றைய தினம் காலை கடமைக்கு அழைத்து அழைத்து செல்ல சக உத்தியோகஸ்தர் ஒருவர் அவரை எழுப்ப முயன்ற போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. அதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.