சில தொழிற்சங்கங்கள் ஆசிரியர்களை போராட்டங்களுக்கு பயன்படுத்துவது கொரோனாவின் பரவலை மேலும் அதிகரிக்கும் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்னா ஜெயசுமன எச்சரித்துள்ளார்.
- Advertisement -
நாட்டில் தற்போது டெல்டா தொற்று அதிகரித்து வரும் நேரத்தில், குறிப்பாக நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக ஆசிரியர்கள் ஒன்றுகூடுவது மிகவும் ஆபத்தானது என்று அவர் மேலும் குறிப்பட்டார். எதிர்காலத்தில் ஆசிரியர்கள் மூலம் ஒரு கொத்தணியை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.