காய்கறிகளையும் பழங்களையும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்களின் உரிமங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
- Advertisement -
கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் தொடர்பில் அலரி மாளிகையில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
- Advertisement -
நாடு முழுவதும் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டாலும் விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் வருகை குறைந்த அளவிலேயே காணப்பட்டதாக அறியமுடிகிறது.
எனினும், இன்றும் மரக்கறிகள் மற்றும் பழங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.