மருதங்கேணி இயக்கச்சி பகுதியில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய படை முகாம் ஒன்றை ஸ்ரீலங்கா அரசாங்கம் அமைத்து வருவதாக தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்க தெரிவித்துள்ளார்.
- Advertisement -
குறித்த படை முகாமில் கனரக யுத்த வாகனங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த சிவாஜிலிங்கம், யாருடன் யுத்தம் புரிவதற்கான முன்ஏற்பாடுகளை அரசாங்கம் செய்கின்றது என கேள்வி எழுப்பியுள்ளார்.