தனது முன்னாள் மனைவியை ரோம் நகர வீதியில் வைத்துக் கொலை செய்த 49 வயதான இலங்கையின் பராமரிப்பு ஊழியர் ஒருவர் நேற்றுக் காலை தடுப்புக் காவலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
- Advertisement -
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், தனது முன்னாள் மனைவியை அவர் கடந்த சனிக்கிழமை ரோம் தெருவில் வைத்து குத்திக் கொலை செய்துள்ளார்.
- Advertisement -
இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் இத்தாலிய தலைநகரின் தெற்கே உள்ள ஃப்ரோசினோனில் உள்ள சிறைச்சாலையில் இன்று காலை செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
பெர்னாண்டோ பசாத் சந்தன கோரலகமகே என்ற இந்த இலங்கையர், 40 வயதான பெரேரா பிரியதர்ஷாவி டோனாஷந்தினி லியனகே என்பவரையே கொலை செய்துள்ளார்.
எனினும் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.