இலங்கையில் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் திடீரென பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -
அத்துடன் , அம்பாந்தோட்டை – மத்தள சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
- Advertisement -
கொழும்பிலுள்ள சில முக்கிய இடங்களுக்குமான பாதுகாப்பு அதிகரிக்கபபட்டுள்ளதென பாதுகாப்பு உயர்பீடத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.
பங்களாதேஷில் தாக்குதலொன்று இடம்பெறப் போவதாக எச்சரிக்கை தகவல் கிடைத்ததைத் தொடர்ந்தே இலங்கையிலும் இவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
கொழும்பு நாரஹேன்பிட்டி லங்கா ஹோஸ்பிட்டன் தனியார் மருத்துவமனையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டு விவகார விசாரணையில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த இளைஞர் வைத்தியசாலைக்கு அருகே இடம்பெறும் கட்டிட நிர்மாணப் பணிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன் வந்தவர் என கூறப்படுகின்றது. கைதானவர் திருகோணமலை – உப்புவெளி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவருகின்றது.
இதேவேளை விமானப்படைத் தளபதி பத்திரண மற்றும் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோர் கோவிட் வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில் லங்கா ஹோஸ்பிட்டலில்தான் தற்சமயம் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.