ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சி இதுவரைகாலமும் தென்னிலங்கையை குறிப்பாக சிங்கள மக்களை மையப்படுத்தியே நடத்தப்பட்டு வந்தது. எனினும் இனிவரும் காலங்களில் தமிழர் பகுதிகளுக்கு செல்ல ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
- Advertisement -

இந்த தகவலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆங்கில ஏடகமொன்றுக்கு தெரிவித்தார். அந்த வகையில் வவுனியா, யாழ்ப்பாணம் என தமிழர் பகுதிகளை நோக்கி இனி ஜனாதிபதியின் ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சி நடைபெறும் என தெரியவருகிறது.