Times.lkTimes.lk
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Search
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Reading: பசறை கோரவிபத்தில் பெற்றோரை இழந்து அநாதரவான பிள்ளைகளை பொறுப்பேற்றார் ஆயர்
Share
Aa
Times.lkTimes.lk
Aa
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Search
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Times.lk > Uncategorized > பசறை கோரவிபத்தில் பெற்றோரை இழந்து அநாதரவான பிள்ளைகளை பொறுப்பேற்றார் ஆயர்
Uncategorized

பசறை கோரவிபத்தில் பெற்றோரை இழந்து அநாதரவான பிள்ளைகளை பொறுப்பேற்றார் ஆயர்

admin
Last updated: 2021/03/29 at 9:28 AM
admin
Share
1 Min Read
SHARE

பசறை 13ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் தாய் தந்தையரை இழந்த மூன்று பிள்ளைகளையும் பதுளை ஆயர் பொறுப்பேற்றுள்ளார். குடும்பத்தவர்களின் விருப்பத்தின்பேரில் பதுளை கத்தோலிக்க மறைமாவட்ட மேதகு வணக்கத்துக்குரிய ஆயர் வின்சன் பெர்ணாண்டோ அடிகளார் பொறுப்பேற்றுள்ளதாக குறித்த பிள்ளைகளின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈயூனியா (09 வயது), ஆரோன் (08 வயது) இவாஞ்சலினா (04) ஆகிய மூன்று பிள்ளைகளுமே ஆயரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே வைத்தியர் ஒருவர் இம்மூன்று பிள்ளைகளையும் தத்தெடுத்து வளர்க்கவுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் நேற்று (27) பதுளை மாவட்ட கத்தோலிக்க மறைமாவட்ட ஆயரினால் பிள்ளைகள் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தமது தாத்தா ( செபஸ்டியன் பெனடிக்ட் (70 வயது ), பாட்டி ஐயாசாமி செல்வநாயகி (63) ஆகியோரின் அரவணைப்பில் அமர்த்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளனர். இக்குடும்பத்திற்கான அத்தியாவசிய தேவைகள் பதுளை மறைமாவட்ட மேதகு ஆயரின் ஆதரவில் லுணுகல புனித லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தையூடாக முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி இப்பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் முழுகவனமும் ஆயரினால் கண்காணிக்கப்படவுள்ளது. பிள் ளைகளில் ஈயூனியா நான்காம் தரத்திலும், இவாஞ்சலினா மூன்றாம் தரத்திலும் லுணுகல இராமகிருஸ்ணா இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இப்பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கும் குடும்ப வாழ்வாதார தேவைகளுக்கும் உதவுவதற்கு முன்வருவோர் ஆயரினால் மேற்கொள்ளப்படவிருக்கும் அறக்கட்டளை நிதியத்தினூடாக உதவ முடியும்.

கடந்த சனிக்கிழமை ( 20/03) பசறையில் நிகழ்ந்த விபத்தில் அந்தோனி நோவா – பெனடிக்ட் மெடோனா தம்பதியினர் உள்ளடங்கலாக 14 பேர் பரிதாபமாக பலியாகிய சம்பவம் முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
admin March 29, 2021
Share this Article
Facebook Twitter Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Previous Article இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த உரம்! ஆய்வில் கண்டுபிடிப்பு
Next Article இலங்கையர்களின் ஓய்வூதிய வயதெல்லையில் மாற்றம்!
Times.lkTimes.lk
Follow US

© 2023 Times Media Network | All Rights Reserved.

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?