உள்நாட்டில் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளதால், ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை எதிர்வரும் ஏப்ரல் இறுதி வரை இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- Advertisement -

எவ்வாறாயினும் முன்பதிவு செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகள் தாமதமின்றி இலங்கையை வந்து சேரும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கைக்கு ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ரா செனகா covid-19 தடுப்பூசியில் 500,000 டோஸ்கள் எதிர்காலத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.