கொரோனா எதிர்ப்பாற்றலைக் கொண்ட உலகின் முதலாவது குழந்தை அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பிறந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுகாதாரப் பணியாளரான கர்ப்பிணித் தாய் தான் கர்ப்பமாக இருக்கும் போது மொடேர்னா தடுப்பு மருந்தைப் பெற்றுள்ளார். 36 வார கர்ப்பிணியாக இருந்த வேளை குறித்த பெண் கடந்த ஜனவரியில் தடுப்பூசியைப் பெற்றுள்ளார்.

அதற்கு மூன்று வாரங்களின் பின் ஆரோக்கியமான ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். ஆராய்ச்சியாளர்கள் குழந்தையின் உடலில் கொவிட்-19 எதிர்ப்பாற்றல் இரத்த பரிசோதனையில் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.