Times.lkTimes.lk
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Search
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Reading: இந்திய அணியின் சீனியர் வீரர்கள் இனி 20 ஓவர் அணிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள்- பிசிசிஐ முடிவு
Share
Aa
Times.lkTimes.lk
Aa
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Search
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Times.lk > sports > இந்திய அணியின் சீனியர் வீரர்கள் இனி 20 ஓவர் அணிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள்- பிசிசிஐ முடிவு
sports

இந்திய அணியின் சீனியர் வீரர்கள் இனி 20 ஓவர் அணிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள்- பிசிசிஐ முடிவு

admin
Last updated: 2023/01/10 at 3:19 PM
admin
Share
2 Min Read
SHARE

இந்திய வீரர்களை தேர்வு செய்யும் புதிய தேர்வு குழு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா, வீராட் கோலி ஆகிய இருவருமே 20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ளனர். 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இதுவரை 8 போட்டிகள் நடந்துள்ளன. இந்திய அணி ஒரே ஒரு முறை மட்டுமே 20 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது. அறிமுக போட்டியான 2007ல் டோனி தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அதன் பிறகு 2014 போட்டிக்கான 20 ஓவர் உலக கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இலங்கையிடம் தோற்றது. இதுவரை 2 முறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரை இறுதியில் இங்கிலாந்திடம் மோசமாக தோற்றது. இதையும் படியுங்கள்: இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்- இலங்கை பந்து வீச்சு தேர்வு 2024-ம் ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது.

இந்த உலக கோப்பை போட்டியிலாவது சாம்பியன் பட்டம் பெற்று விட வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.பி.சி.ஐ.) தீவிரமாக உள்ளது. இதனால் இப்போதே இளம் வீரர்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. உலக கோப்பையை கருத்தில் கொண்டு சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, வீராட்கோலி ஆகியோர் இனி வரும் 20 ஓவர் போட்டியில் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று தெரிகிறது. ஹர்திக் பாண்ட்யா அணிக்கு கேப்டனாக செயல்படுவார்.

அவர் ஏற்கனவே பல தொடர்களில் கேப்டனாக இருந்து 20 ஓவர் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அவர் நீண்ட காலத்துக்கு 20 ஓவர் அணியின் கேப்டனாக செயல்பட கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. இதையும் படியுங்கள்: ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் பும்ரா ஆடுவது சந்தேகம் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட 20 ஓவர் அணியை தான் கிரிக்கெட் வாரியம் விரும்புவதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய வீரர்களை தேர்வு செய்யும் புதிய தேர்வு குழு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சேட்டன் சர்மா தொடர்ந்து தேர்வு குழு தலைவராக நீடிக்கப்பட்டு உள்ளார். 20 ஓவர் போட்டியின் எதிர்காலம் தொடர்பாக அவர் ரோகித்சர்மா, வீராட்கோலி ஆகியோருடன் பேசுவார் என்று தெரிகிறது. அப்போது கிரிக்கெட் வாரியத்தின் திட்டத்தை எடுத்துரைப்பார். அவர்களாகவே 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்பேத கிரிக்கெட் வாரியத்தின் விருப்பமாக உள்ளது.

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
admin January 10, 2023
Share this Article
Facebook Twitter Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Previous Article விமான நிலையத்தில் கைதான இலங்கை அய்யப்ப பக்தர்; காரணம் குறித்து அதிர்ச்சி
Next Article ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் பும்ரா ஆடுவது சந்தேகம் !
Times.lkTimes.lk
Follow US

© 2023 Times Media Network | All Rights Reserved.

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?