கொழும்பு புறநகர பகுதியில் பயணிகளின் உயிரை பணயம் வைத்த சாரதி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. கடுவெல – கொள்ளுப்பிட்டி பேருந்து வழித்தடத்தில் பேருந்து சாரதி ஒருவரே இவ்வாறு செயற்பட்டுள்ளார்.
- Advertisement -
இரவு நேர பேருந்து பயணத்தின் போது சாரதி கையடக்க தொலைபேசியில் படம் பார்த்த நிலையில் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
- Advertisement -
இந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று பேஸ்புக் பக்கதில் வெளியாகி மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் ஆபத்தானது மற்றும் இங்கு பயணிக்கும் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என பலரும் குறிப்பிட்டுள்ளனர்..