Times.lkTimes.lk
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Search
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Reading: நிவாரண அரிசிக்கு மக்களிடம் கட்டணம் அறவிட்ட அதிகாரிகள்! எழுந்துள்ள குற்றச்சாட்டு…
Share
Aa
Times.lkTimes.lk
Aa
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Search
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Times.lk > News > Local News > நிவாரண அரிசிக்கு மக்களிடம் கட்டணம் அறவிட்ட அதிகாரிகள்! எழுந்துள்ள குற்றச்சாட்டு…
Local News

நிவாரண அரிசிக்கு மக்களிடம் கட்டணம் அறவிட்ட அதிகாரிகள்! எழுந்துள்ள குற்றச்சாட்டு…

admin
Last updated: 2023/04/23 at 10:30 AM
admin
Share
1 Min Read
SHARE

கண்டி – தெல்தொட்டை – பாலுகம பகுதியில் நிவாரணத்தின் அடிப்படையில் அரிசியை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் அரிசியை பெற்றுக் கொள்ள சென்ற மக்களிடம் இருந்து தலா 50 ரூபா கட்டணம் அறவிடப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளரின் கண்காணிப்பின் கீழ் சமுர்த்தி அதிகாரிகளின் ஊடாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 20 கிலோகிராம் அரிசியை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதன் முதல் கட்டமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 கிலோகிராம் அரிசி வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் தெல்தொட்டை – பாலுகம பகுதியில் கடந்த 20ஆம் திகதி அரிசி வழங்கப்பட்ட போது அதனை பெற்றுக் கொள்ள சென்றிருந்த மக்களிடம் தலா 50 ரூபா கட்டணம் அறவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து மற்றும் அதிகாரிகளின் அன்றைய நாளுக்கான வேதனத்தை செலுத்துவதற்கு என தெரிவித்து குறித்த கட்டணம் அறவிடப்பட்டதாக அங்கு அரிசியை பெற்றுக் கொள்ள சென்றிருந்த மக்கள் குறிப்பிடுகின்றனர்.

சுமார் 250 க்கும் மேற்பட்டோரிடம் குறித்த கட்டணம் அறவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த குற்றச்சாட்டு தொடர்பில் எமது செய்தி சேவை தெல்தொட்டை பிரதேச செயலாளர் ஆத்ம ஜயரத்னவை தொடர்பு கொண்டு வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், குறித்த சந்தர்ப்பத்திலேயே தமக்கு அது குறித்து அறிய கிடைத்ததாகவும், இந்த விடயம் தொடர்பில் சமுர்த்தி முகாமையாளரிடம் எழுத்துமூல விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
admin April 23, 2023
Share this Article
Facebook Twitter Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Previous Article முற்றிய குடும்ப தகராறு; மகளின் கண் முன்னே நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து உயிர்மாய்த்த தாய்..! இலங்கையில் சோகச் சம்பவம்
Next Article 5 வயது மகனை நடுவீதியில் அநாதரவாக கைவிட்டு இரண்டாவது கணவருடன் ஓடிச்சென்ற தாய்..!
Times.lkTimes.lk
Follow US

© 2023 Times Media Network | All Rights Reserved.

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?