வருகின்ற தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்கான விசேட போக்குவரத்துச் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், வழமையாக இயங்கும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக 300 பேருந்துகளை இயக்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
- Advertisement -
குறித்த விசேட பேருந்து சேவையானது எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் இயங்கும் என கூறப்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்தில் பயணிகளின் தேவைகளுக்கு அமைய பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்