உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதென்றால் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் நிறுத்தப்படப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அது மாத்திரமின்றி சமுர்த்தி கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இந்த அனைத்து கொடுப்பனவுகளை இடைநிறுத்தினால் தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.