உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதை இடைநிறுத்த வேண்டும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அத்துடன் சமுர்த்தி கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். கொடுப்பனவுகளை இடைநிறுத்தி தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.