சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மெய்யப்பன். இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
- Advertisement -
மூத்த மகள் திவ்யா (வயது 16). இவர் சித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் திவ்யாவுக்கு கடந்த ஆண்டு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
- Advertisement -
சிகிச்சைக்கு பிறகு அவர் மூக்கு கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிகிறது. கட்டிட வேலை செய்து போதிய வருவாய் ஈட்ட முடியாமல் பிள்ளைகளைக் காப்பாற்ற போராடி வந்த பெற்றோர்களால்,
மூத்த மகள் திவ்யாக்கு மூக்கு கண்ணாடி வாங்கி தர இயலவில்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சென்ற திவ்யா பாதியிலே 10 மணிக்கு வீடு திரும்பியுள்ளார்.
பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
வேலைக்கு சென்ற சிறுமியின் தாய் மைதிலி மதியம் உணவு அருந்த வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் மகள் கதவை திறக்காததால் கதவை உடைத்து பார்த்துள்ளனர்