பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு அளுத்கமவில் வீடொன்றை காண்பித்து அதனை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -
அதற்கமைய, 15.5 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -
பிரித்தானிய பிரஜை செய்த முறைப்பாட்டிற்கமைய, அளுத்கம களுவாமோதர பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் வீட்டைக் காட்டி, வீட்டைக் கொடுக்காமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு நிதி மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்