Times.lkTimes.lk
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Search
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Reading: கனடாவில் இருந்து வந்து யாழில் பல லட்சம் செலவழித்து மகளின் சாமத்தியவீடு; மறுநாள் காலை தாயும் மகளும் தலைமறைவு..!
Share
Aa
Times.lkTimes.lk
Aa
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Search
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Times.lk > News > Local News > கனடாவில் இருந்து வந்து யாழில் பல லட்சம் செலவழித்து மகளின் சாமத்தியவீடு; மறுநாள் காலை தாயும் மகளும் தலைமறைவு..!
Local News

கனடாவில் இருந்து வந்து யாழில் பல லட்சம் செலவழித்து மகளின் சாமத்தியவீடு; மறுநாள் காலை தாயும் மகளும் தலைமறைவு..!

admin
Last updated: 2023/01/10 at 8:57 PM
admin
Share
1 Min Read
SHARE

யாழ் வலிகாமம் பகுதியில் தனது மகளின் சாமத்தியவீட்டை சிறப்பாகச் செய்வதற்காக கனடாவில் இருந்து வந்த குடும்பப் பெண் தனது சடங்கான மகளுடன் தலைமறைவாகியுள்ளார். கணவருடன் ஏற்பட்ட சண்டையின் பின்னரே குடும்பப் பெண் தனது மகளுடன் காணாமல் போயுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த குடும்பப் பெண்னையும் மகளையும் காணவில்லை என பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

கடந்த வியாழன் இரவு தனது மனைவி தன்னுடன் சண்டையிட்டு தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அதன் பின்னர் அவரது தொடர்பு கிடைக்கவில்லை எனவும் கணவர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். இதன் பின்னர் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் மனைவி தான் கணவருடன் முரண்பட்டு தனது உறவுக்காரர் வீட்டில் தங்கியுள்ளதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் பொலிசாருக்கு அறிவித்துள்ளார். அத்துடன் தனது கணவர் தன்னை மது போதையில் கணவரின் உறவுகளுக்கு முன் தாக்கியதாலேயே தான் அவருடன் தங்கவில்லை எனவும் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.

கனடாவுக்கு மீளச் செல்வதற்கான விமான ரிக்கட் திகதியில் தாம் கட்டுநாயக்காவுக்கு செல்வோம் என குறித்த குடும்ப பெண் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் யாழில் உள்ள பிரபல விடுதியில் பெருமளவு பணச் செலவில் குறித்த தம்பதியினர் தமது மகளுக்கு சாமத்திய சடங்கு செய்துள்ளதுடன் அந்த சடங்கில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் 2 ஆயிரம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான நினைவுப் பரிசுகளும் கொடுத்துள்ளார்கள். அத்துடன் அன்று இரவு கணவரின் உறவுக்காரரின் வீட்டில் வெளிநாட்டுச் சாராயத்துடன் கூடிய விருந்தும் மற்றும் இசை நிகழ்வும் நடந்துள்ளது.

இதற்கு அடுத்தநாளே கணவர் தனது மனைவியை தனது உறவுக்காரர் முன் தாக்கியதாக தெரியவருகின்றது. இதன் பின்னரே மனைவி மற்றும் மகள் கணவரை விட்டு பிரிந்து சென்றார்கள் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
admin January 10, 2023
Share this Article
Facebook Twitter Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Previous Article அரச ஊழியர்களுக்கு தேவையற்ற அச்சம் வேண்டாம் – அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு
Next Article திருமணத்தின்போது பிள்ளைகளுடன் வந்த முதல் மனைவி : மணமகனின் சகோதரரை கரம்பிடித்த மணமகள் ..!
Times.lkTimes.lk
Follow US

© 2023 Times Media Network | All Rights Reserved.

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?