அரச ஊழியர்களின் சம்பளம் அல்லது சமுர்த்தி உள்ளிட்ட நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை நிர்வகிப்பதில் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நிதியமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.