ஹொரவபொத்தானை பிரதேசத்தில் மேலதிக வகுப்பில் கலந்து கொண்ட 10 வயதான சிறுமி ஒருவரை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைதாகியுள்ளார் . சந்தேகநபர் நேற்று (08) மாலை கைது செய்யப்பட்டதாக ஹொரவபொத்தானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -
கைதான ஆசிரியர் நடத்திய பயிற்சி வகுப்பில் சிறுமி கலந்து கொண்டபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -
மேலும் தான் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமையை சிறுமி வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் கூறியதாகவும் சிறுமியின் பெற்றோர் சட்ட நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதேவேளை சந்தேக நபருக்கு அதே வயதுடைய ஒரு மகளும் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்