மாமனாரால் தாக்கப்பட்டு 28 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டோலஹேன பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
- Advertisement -
இது சனிக்கிழமை (டிச.03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (டிச.02) இரவு ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -
இச் சம்பவத்தில் 57 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெலிசர நீதவான் முன்னிலையில் முன்னிலை படுத்தப்படவுள்ளார். மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.