பருத்தித்துறை துறைமுகத்தில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்து TikTok வீடியோ எடுத்த 22 வயது இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் கடலுக்குள் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் இன்று (01) மாலை இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
இதன்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து இளைஞருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளும் கடலுக்குள் பாய்ந்தது.
- Advertisement -
இச் சம்பவத்தையடுத்து அப்பகுதியில் நின்றவர்களால் இளைஞர் காப்பற்றப்பட்டதுடன் கடலுக்குள் விழுந்த மோட்டார் சைக்கிளை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மீட்டனர்.