கடுவெல நவகமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் உள்ள அறையொன்றில் தலையணையின் கீழ் நாகப்பாம்பு ஒன்று இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு இந்த அறையில் இருந்த நபர் வழக்கம் போல் உறங்க சென்றுள்ளார்.
- Advertisement -
வழக்கம்போல தலையணையை அணைத்து உறங்கிய அவர், பெட் ஷீட்டிற்கு அடியில் ஏதோ ஏறியதை உணர்ந்ததால் எழுந்து விளக்குகளை போட்டு பார்த்துள்ளார்.
- Advertisement -
அங்கே அவகண்ட காட்சியால் வெலவெலத்து போயுள்ளார். ஏனெனில் மூன்றரை அடி பாம்பு ஒன்று அவரது கட்டிலில் அமர்ந்திருந்தது. அதன் பின்னர் வீட்டினர் அப்பாம்மை வெளியே விரட்டிவிட்டதாக கூறப்படுகின்றது.
அதேவேளை வீட்டின் உள்ளே மிகவும் சுத்தமான நிலையில் இருந்ததால், பாம்பு எப்படி வீட்டிற்கு வந்தது என வீட்டினர் குழம்பிப்போயுள்ளார்களாம்.
என்னதான் வீட்டினை நாம் சுத்தமாக வைத்திருந்தாலும் படுக்கைக்கு செல்லுமுன்னர் ஒருதடவை படுக்கை விரிப்புக்களை உதறி பார்த்துவிட்டால் இவ்வாறான அசம்பாவிதங்களை தடுக்கலாம்.