கோவிட் காலத்தில் N95 வகை முகக்கவசம் ஒன்றை அரச மருந்தக கூட்டுத்தாபனத்திடமிருந்து 475 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும்.ஆனாலும் இலங்கையில் உள்ள வைத்தியசாலை ஒன்று அதிக விலைக்கு முக கவசங்களை ,கொள்வனவு செய்ததன் மூலம் பதினேழு இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு கணக்காய்வாளர் திணைக்களம் சுகாதார அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளது.
- Advertisement -
2020 ஆம் ஆண்டில் ராகம போதனா வைத்தியசாலையில் இந்த நிலை காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.1080 ரூபாவுக்கு குறித்த முகக் கவசம் கொள்வனவு செய்யப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
- Advertisement -
சுகாதார அமைச்சு டிசம்பர் 31, 2021 அன்று நடத்தப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைக்கு போதிய முகக் கவசங்களை மருத்துவ வழங்கல் திணைக்களம் வழங்கியுள்ள நிலையிலும் இந்த கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.