முல்லைத்தீவு வலய பாடசாலை மாணவர்களை தனியார் கல்வி நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள தியேட்டருக்கு ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை பார்ப்பதற்கு அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
- Advertisement -
வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனச் செயற்பாட்டுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவே, இவ்வாறு பாடசாலை நாளில் தியேட்டருக்கு அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -
இதற்காக மாணவர் ஒருவரிடமிருந்து ஆயிரத்து 500 ரூபா பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.