யாழில் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், மற்றும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அதி தீவிர சிகிற்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
குறித்த விபத்து சம்பவம் யாழ்.கொட்டடி – லைடன் சந்தியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
சம்பவத்தில் கொட்டடியைச் சேர்ந்த றொபிக்ஷன் (வயது-21) என்ற இளைஞரே உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்.மாநகரில் இருந்து கொட்டடி நோக்கி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்நிலையில் மோட்டார் சைக்கிள் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவத்தில் இடத்தில் உயிரிழந்தார்.
மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.