“வடக்கு மாகாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை திடீரென அதிகரித்தமை மிகவும் கவலையளிக்கின்றது.” என பிரதமர் தினேஷ் குணவர்த்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
- Advertisement -
“நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விற்பனையாளர்களையும், பாதாள உலகக் குழுவினரையும் தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினர் களமிறங்கியுள்ளனர்.
- Advertisement -
இந்த நிலையில், வடக்கில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்.
முதலில் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால்தான் போதைப்பொருள் பாவனையை முடிவுக்குக் கொண்டுவர முடியும்” என்றார்.