வறுமை காரணமாக மாணவர் ஒருவர், மதிய உணவுக்கு தேங்காய் துண்டுகளை உட்கொண்ட சம்பவம் ஆதாரமற்றது என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
- Advertisement -
அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் எந்தவொரு குழந்தைக்கோ அல்லது குடும்பத்துக்கோ உதவ ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு கூறியுள்ளது.
- Advertisement -
அதன்படி உதவியினை பெற 0114354647 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்கமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள பாடசாலையில், தரம்-9 இல் கல்வி பயிலும் மாணவ தலைவியொருவர், பகலுணவாக தேங்காய் துண்டுகளைக் கொண்டுவந்து உட்கொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.