முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவின் ஆலோசனையின் பிரகாரமே நாட்டில் ஆட்சி நடக்கின்றது . எனவே , ‘ கப்புடா’வை ( காகம் ) தேசியப் பறவையாக அறிவித்தால் கூட ஆச்சரியமில்லை – இவ்வாறு சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார் .
- Advertisement -
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் கூறுகையில், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் . உரப்பிரச்சினையால்தான் இந்த நிலைமை ஏற்பட்டது . இவற்றுக்குத் தீர்வைத் தேடாமல் , தேசிய விலங்கான மர அணிலை மாற்றவேண்டும் என யோசனை முன்வைக்கப்படுகின்றது .
- Advertisement -
நமது நாட்டை கப்புடா ( பஸில் ) தான் ஆள்கின்றது . எனவே , தேசியப் பறவை யாக கப்புட்டாவை அறிவித்தால்கூடப் பரவாயில்லை .
சர்வகட்சி அரசாங்கம் என்ற போர்வை யில் அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது . மக்கள் இதனை எதிர்பார்க்க வில்லை – என்றார் .