யாழ்ப்பாணத்தில் அதிசயமாக கோழிக்குஞ்சு பொரித்துள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
- Advertisement -
அச்சுவேலி – காலானை பகுதியில் உள்ள மகாராஜா கௌரி என்பவரின் வீட்டிலேயே கோழிக்குஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பொரித்துள்ளது.
- Advertisement -
குறித்த குடும்பப் பெண் கோழி வளர்ப்பினையே ஜீவனோபாயமாக மேற்கொண்டு வருகின்றார்.
இவரது வீட்டில் ஆறு கோழிக் குஞ்சுகள் பொரித்த நிலையில், அதில் ஒன்று நான்கு கால்களுடன் காணப்படுகின்றது.
ஏனைய கோழிக் குஞ்சுகளைப் போல குறித்த கோழிக் குஞ்சும் சுறுசுறுப்பாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கோழிக்குஞ்சினை பிரதேசத்தில் உள்ள மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.