நாட்டின் இருவேறு பகுதிகளில் உயிரிழந்த நிலையில் ஆண்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சடலங்கள் இரண்டும் 08 ஆம் திகதி திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
- Advertisement -
ருவன்வெல்ல
- Advertisement -
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வஹரக பிரதேசத்தில் கிணற்றில் இருந்து உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 59 வயதுடையவர் என்றும் கொனகல்தெனிய, வஹரக பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் அவிஸ்ஸாவெல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் கடந்த 6 ஆம் திகதியிலிருந்து அவர் காணாமல் போயிருந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தொடுவாவ
தொடுவாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தொடுவாவ பிரதேசத்தில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சடலம் தொடுவாவ பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதிற்கு ,டைப்பட்டவர் எனவும் 5 அங்குலம் 6 அடி உயரம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மாரவில வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் தொடுவாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.