சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்றையதினம் கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி அரசாங்கம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
- Advertisement -
இவ்வாறான நிலையில் சர்வகட்சி வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு தயார் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இந்நிலையில் விரைவில் ரணில் தலைமையிலான சர்வ கட்சி அரசாங்கத்ததுடன் விக்னேஸ்வரனும் இணைய வாய்ப்புள்ளதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.