மட்டக்களப்பு – ஜெயந்திபுரம் பிரசேத்தில் விவாகரத்துக் கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து விட்டு பெற்றோருடன் வாழும் தனது மனைவியை, தனது பெற்றோருடன் முச்சக்கர வண்டியில் மனைவியின் வீட்டுக்குச் சென்று கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் குறித்த பெண்ணின் கணவர், அவரது பெற்றோர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்தனர்.
- Advertisement -
இதனையடுத்து மூவரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் நேற்று வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார்.
- Advertisement -
மேலும் தெரியவருகையில், குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரை கடந்த 6 மாதத்துக்கு முன்னர் திருமணம் முடித்துள்ளார்.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கணவனைவிட்டு பிரிந்து சென்று தனது பெற்றோருடன் வாழ்ந்துவரும் மனைவி, கணவனை விவாகரத்துக் கோரி அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை( 29) காலையில் குறித்த பெண்ணின் வீட்டை பெண்ணின் கணவர் அவரது பெற்றோர் உட்பட 3 மூவர் முச்சக்கரவண்டியில் சென்று முற்றுகையிட்டு பெண்ணின் தாயார் மற்றும் அவரது இரு சகோதரிகளை தாக்கி விட்டு பெண்ணைக் கடத்திச் சென்று தனது வீட்டின் அறையில் பூட்டி வைத்துள்ளனர்.
இதேவேளை, தாக்குதலில் காயமடைந்த பெண்ணின் தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டில் பெண்ணைக் கடத்திச் சென்றவர்களின் வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்டதுடன் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணின் கணவர் அவரது பெற்றோர் உட்பட மூவரைக் கைது செய்தனர்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் நேற்று மாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் திங்கட்கிழமை வரைவிளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.