ஆசியாவின் ஆச்சரியமான ,ஆபத்துக்குள்ளே பஞ்சம் பசியோடு கூடிய நாடாக இந்த நாட்டினை மீளவும் கொண்டு வந்து நிறுத்துவதற்கு தான் இந்த புதிய அரசாங்கம் முயலும் என யாழ்ப்பாணம் வலிகாமம் தென்மேற்கு (மாணிப்பாய்) பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசன் தெரிவித்திருந்தார்.
- Advertisement -
நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போது பொறுப்பெடுத்திருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் என்பது ஜனநாயக போராடடத்திற்கு முழுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்துகின்ற அவசரகால சடடத்தினை நடைமுறைப்படுத்தி ஜனநாயக இளைஞர்கள் தலைமையிலான போராட்டத்தினை முற்று முழுதாக நாட்டில் சிதறியடிக்கின்ற செயற்பாட்டினை அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது.
- Advertisement -
இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் ஜனநாயக போராட்டத்தினை முற்று முழுதாக இல்லாது ஆக்குகின்ற அல்லது மக்களின் குரல்களுக்கு செவி சாய்க்காத ஒன்றாகவே பார்க்கப்படும் .
இந்த ஜனநாயக போராடடத்துக்கு அரசாங்கம் முழுமையான அனுமதி வழங்கப்படுகிறது என ஒரு புறம் கூறினாலும் மறுபுறம் இப்படியான சட்ட சிக்கல்களுக்குள் உள்ளே ஏற்படுத்துகின்ற நிலைமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது .
பல்வேறுபடட அமைச்சர்களும்,அதிகாரிகளும் கோடிக்கணக்கான நிதிகளை கையாடல்களை மேற்கொண்டிருக்கையில் அதற்கான நடவடிக்கைகளை எடுக்காத நிலையில் போராடடக்காரர்கள் மீது அவசர கால சடடமும்,இலங்கையினுடைய சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவது என்பது வெட்கக் கேடான ஒன்றாகும்.அதனை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் .ஜனநாயக குரல் வழிகளை நசுக்க கூடாது .
பத்திரிகைக்காரர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்கல்களை மேற்கொண்டு கைது செய்யப்பட்டிருந்தனர் ,எனவே அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். மேலும் ,இலங்கை நாடானது போதைப்பொருளினுடைய நாடாக மாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. பாதுகாப்பு தரப்பினர் ,அவசரகால சட்ட்ங்கள் இருந்தும் இலங்கை அதிகளவு போதைப்பொருள் விற்பனைக் கூடமாக மாறியிருக்கின்றது.
பல கோடிக்கணக்கான போதைப்பொருட்கள் பிடிபடுகின்றது.ஆனால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இலங்கையிலே இளைஞ்ர்கள் வாழக்கூடிய சூழ்நிலையினை அரசாங்கம் விரைந்து சட்ட ஏற்பாட்டின் மூலம் ஏற்படுத்த வேண்டும்.இதனால் வாழக்கூடிய பூமியை இந்த நாட்டில் ஏற்படுத்த முடியும்.
தற்போது பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.எரிபொருளினை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை இருக்கிறது . விவசாயிகளும்,மீனவர்களும் அத்தியாவசியாயமாக இருக்கின்ற மண்ணெண்ணையினை 2 மாதங்களாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படாமல் இருக்கினறன. மக்களின் அத்தியாவசியமான மண்ணெண்ணெய் இருக்குமது செய்யப்படாது இருக்கினறது.
எனவே விவசாயிகள் ,மீனவர்களின் அத்தியாயவசியமாக இருக்கின்ற மண்ணெண்ணெய்யினை மானிய விலையிலே மீளவும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்காது விடடால் இன்னுமொரு பஞ்சமாக ,ஆசியாவின் ஆச்சரியமாக ஆபத்துக்குள்ளே பஞ்சம் பசியோடு கூடிய நாடாக இந்த நாட்டினை இந்த அரசாங்கம் மீளவும் கொண்டு வந்து நிறுத்துவதற்கு தான் இந்த புதிய அரசாங்கம் முயலும். என்றார்.