குறைந்தது 5 நிமிடங்கள் ஏதாவது ஒரு வரிசையில் நின்று காட்டுங்கள் என்று அமைச்சர்களுக்கு சவால் விடுக்கின்றோம் என்று தெரிவித்த ஜே.பி.பி பிரசார செயலாளரும் எம்.பி.யுமான விஜித் ஹேரத் , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரேநேரத்தில் சர்வதேசத்தையும் ராஜபக்ஷக்களையும் மகிழ்விக்க முயற்சிப்பாராக இருந்தால் சர்வதேசத்தை பகைத்துக்கொள்ள வேண்டிய நிலைமையே ஏற்படும் என்றும் கூறினார்.
- Advertisement -
பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , தற்போது எமது நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது .
- Advertisement -
52 பில்லியன் டொலர் கடன்கள் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது . நாட்டின் பண வீக்கம் 60 வீதத்தை கடந்துள்ளது . எரிபொருள் , எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் இன்னும் முடிவடையவில்லை . அதேபோன்று உரம் ,மருந்து உள்ளிட்ட பிரச்சினைகளும் தொடர்கின்றன .
நெருக்கடி நிலைமைகளில் கர்ப்பிணிகளைக் கூட வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்ல முடியாது குழந்தையும் தாயும் இறக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது . ஆனால் தற்போதைய ஜனாதிபதியிடம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை . நாளொன்றுக்கு நான்கு இலட்சம் பேர் வரையிலானோர் எரிபொருள் வரிசைகளில் இருக்கின்றனர் .
அவர்கள் நாள் முழுவதும் அந்த வரிசையில்இருப்பதால் குறைந்தது 40 கோடி மனித சக்தி மணித்தியாலங்கள் வீணடிக்கப்படுகின்றன.