யாழில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இந்நிலையில் தற்போது அரசாங்கத்தால் எரிபொருள் விநியோகத்திற்கென கியு ஆர் நடைமுறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் செயற்பாட்டில் காணப்படுகின்றது.
- Advertisement -
இது இவ்வாறு இருக்க யாழில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நடத்திய திருவிளையாடல்கள் அம்பலமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
- Advertisement -
மோட்டார் சைக்கிளின் இலக்கத்தின் அடிப்படையில் வாரந்தோறும் ஒருநாள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மோசடியான முறையில் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தினை மாற்றி எரிபொருளை பெற்றுக்கொள்ளும் எண்ணத்துடன் யாழ் இளைஞனொருவன் தனது மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை கழற்றி அதற்கு பதிலாக வேறொரு மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை மாற்றி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எரிபொருள் வரிசையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தும் போதே தலைகீழாக இலக்கத்தகடு பொருத்தப்பட்டிருப்பதை கண்ணுற்று அவ்விடத்திலிருந்து சாமர்த்தியமாக நழுவிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.