கந்தப்பளை – ஹைபொரஸ்ட் பகுதியில் உள்ள தோட்டத்தின் தனிவீட்டுக் குடியிருப்பில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, ஹைபொரஸ்ட் இலக்கம் 1 தோட்டப் பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் காவியா என அழைக்கப்படும் இராஜமாணிக்கம் விசாந்தினி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வீட்டின் வாசல் பகுதியில் உள்ள கூரைக் கம்பத்தில் சேலைப் பட்டியில் கழுத்து இறுகியவாறு சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

12.06.2022 அன்று இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.