கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
பெரஹெர மாவத்தைக்கும் பெய்ர ஏரிக்கும் இடையில் உள்ள நடைபாதையில் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தவர் கலஹிட்டியாவ – குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
- Advertisement -
தாக்குதலுக்கு உள்ளான அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரேதப் பரிசோதனையில் தலை மற்றும் மார்பில் ஏற்பட்ட காயங்களால் மரணம் நிகழ்ந்தது தெரியவந்தது.