நிதியமைச்சர் பதவியை தானே பொறுப்பு ஏற்று கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவை இன்னும் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படாத போதிலும், தனக்கு நிதியமைச்சர் பதவி வேண்டும் என பிரதமர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கைக் குழுவை பிரதமர் இனிமேல் வழிநடத்துவார். முன்னதாக, நிதியமைச்சராக பதவியேற்குமாறு ஹர்ஷ டி சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அரசாங்கத்தில் இணைந்துகொள்ள அவர் கடுமையாக மறுத்திருந்தார்.