துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 27 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
நிட்டம்புவ பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தற்போது ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
அவ்வாறு காயமடைந்தவர்களில் ஒருவர் சத்திர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.