ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
- Advertisement -
ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.