நாட்டுக்கு குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக அடுத்த வாரத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
- Advertisement -
தாய்லாந்தின் சியாம் நிறுவனத்திடம் இருந்து இந்த எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக அடுத்த வாரத்திற்குள் அமைச்சரவை அனுமதி கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -
எதிர்வரும் 2 வருடங்களுக்கு நாட்டுக்கு எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு கேள்வி மனுவின் ஊடாக குறித்த தாய்லாந்து நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 இரண்டு ஆண்டுகளில், எரிவாயுவை இறக்குமதி செய்யும் நிறுவனம், மெட்ரிக் டன் ஒன்றுக்கு அறிவிட்ட தொகையை விடவும் 9 டொலர் குறைவாக, புதிய நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.