யாழ். கீரிமலை பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்துத் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
வீட்டிற்கு வெளியே உள்ள மரத்தில் தூக்கிட்டு இவ்வாறு உயிரிழந்துள்ளார். இளைஞன் சடலமாகத் தூக்கில் தொங்கியதை அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
- Advertisement -
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை, உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளனர்.