நாடளாவிய ரீதியில் செயற்படும் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் காணிகள், வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
நிதி அமைச்சின் கட்டுப்பாட்டாளர் நாயகம் கே.ஏ.ரம்யா காந்தி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். குறித்த அறிவுறுத்தலுக்கமைய அனைத்து அரசு நிறுவனங்களும் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான பெரும்பாலான காணிகள் அங்கீகாரமற்ற ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அங்கீகாரமற்ற வகையில் பயன்படுத்தப்படும் காணிகள், வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் தொடர்பான தகவல்களும், அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.