சிறிலங்கா அமைச்சர் மீது இளைஞர்கள் குழு தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி லப்புதுவ பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரை காலி லப்புதுவ பிரதேசத்தில் வைத்து இளைஞர்கள் சிலர் தாக்க முயற்சித்துள்ளனர்.
- Advertisement -
அமைச்சர் சென்ற வாகன தொடரணி லப்புதுவ சந்தையில் உள்ள முச்சக்கர வண்டி நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது அமைச்சர் அங்கிருந்த இளைஞர்களைப் பார்த்து “என்ன தம்பி…” கேட்டுள்ளார்.
- Advertisement -
அமைச்சர் அப்படி கேட்டதால், கோபமடைந்த இளைஞர்கள் “ஏன்.. ஏன்.. என்ன ஐயா” என கூறியவாறு ஒன்று கூடி அமைச்சரைத் தாக்க முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அச்சமடைந்த அமைச்சரின் சாரதி உடனடியாக செயற்பட்டு, வாகனத்தை அந்த இடத்தில் இருந்து எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது.