Times.lkTimes.lk
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Search
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Reading: தமிழ் புத்தாண்டு 2023 : எப்படி வழிபட வேண்டும்? என்ன பொருள் வாங்க வேண்டும்?
Share
Aa
Times.lkTimes.lk
Aa
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Search
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Times.lk > News > தமிழ் புத்தாண்டு 2023 : எப்படி வழிபட வேண்டும்? என்ன பொருள் வாங்க வேண்டும்?
News

தமிழ் புத்தாண்டு 2023 : எப்படி வழிபட வேண்டும்? என்ன பொருள் வாங்க வேண்டும்?

admin
Last updated: 2023/04/13 at 11:15 PM
admin
Share
4 Min Read
SHARE

சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். இந்த நாளில் தான் பிரம்ம தேவர் உலக உயிர்களை படைக்க துவங்கியதாக சொல்லப்படுகிறது. சூரிய பகவான், மேஷம் துவங்கி மீனம் வரை 12 ராசிகளிலும் தனது பயணத்தை நிறைவு செய்வதை ஒரு ஆண்டு என்கிறோம்.

சித்திரை மாத பிறப்பு என்பது மங்கலங்களின் பிறப்பாக கருதப்படுகிறது. அதனால் தான் இந்த நாளில் பஞ்சாங்கம் படிக்கும் வழக்கம் உள்ளது. அந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து தெரிந்து, அதற்கு ஏற்ப தங்களின் வாழ்க்கை முறையை அமைத்து கொள்வதும், பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதும் தமிழர்களிடம் பழங்காலமாக வழக்கத்தில் இருந்து வரும் பழக்கமாக உள்ளது.

சோபகிருது ஆண்டு :
தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுகிறோம். தமிழ் புத்தாண்டு, தமிழ் வருடப்பிறப்பு, சித்திரை பிறப்பு, சித்திரை விஷூ, சித்திரைக் கனி, சங்கராந்தி என பல பெயர்களால் தென்னிந்தியாவில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு 2023 தேதி :சூரிய பகவான் தனது பயணத்தை மேஷ ராசியில் இருந்து மீண்டும் துவங்கும் காலமாகும். ஏப்ரல் 14 ம் தேதி சுபகிருது ஆண்டு நிறைவடைந்து சோபகிருது ஆண்டு பிறக்க உள்ளது. இந்த நாளில் கனி காண்பது மிகவும் சிறப்புக்குரியது. தமிழர்களின் புத்தாண்டு பிறப்பாக கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டை பாரம்பரிய முறையில் கொண்டாட நம் முன்னோர்கள் சில வழி முறைகளை வகுத்து வைத்துள்ளனர்.
​திருப்பதி ஏழுமலையான், குபேரனிடம் வாங்கிய கடனை அடைத்து விட்டாரா?​

​தமிழ் புத்தாண்டு பூஜை :தமிழ் புத்தாண்டை கொண்டாட முதல் நாளே அனைத்தையும் தயார் செய்து விட வேண்டும். வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையில் சுவாமி படங்களை துடைத்து வைத்து விட வேண்டும். முதல் நாள் இருவே ஒரு தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை வைக்க வேண்டும். இவைகள் கண்டிப்பாக வைக்க வேண்டும். இது தவிர வேறு பழங்களும் வைக்கலாம். அதோடு கண்டிப்பாக ஒரு எலுமிச்சை பழம் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு வைத்து, வீட்டில் இருக்கும் தங்க நகை ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும்.

​சித்திரை கனி :ரூபாய் நோட்டு கட்டு இருந்தால் வைக்கலாம். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு ரூபாய் நோட்டு அல்லது சில்லறை காசுகள் வைக்கலாம். இதற்கு முன் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை வைத்து விட வேண்டும். காலையில் எழுந்து, கண் விழிக்கும் முன் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தட்டில் வைத்துள்ள பழங்கள், பணம், நகை ஆகியவற்றை தான் முதலில் பார்க்க வேண்டும். பிறகு கண்ணாடியில் அவரவர்களின் முகத்தை பார்த்து விட்டு, மகாலட்சுமியை நினைத்து, தட்டை தொட்டு வணங்கி விட்டு, அன்றாட வேலைகளை செய்யலாம்.

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் :குளித்து முடித்த பிறகு, விளக்கேற்றி வைத்து, அந்த பழங்கள் வைத்துள்ள தட்டிற்கு தீப தூப ஆராதனை காட்டி வழிபட வேண்டும். அன்று சமைக்கும் உணவில் கண்டிப்பாக அறுசுவைகளும் இருக்க வேண்டும். கசப்பும் சிறிதளவு சேர்க்க வேண்டும் என்பதற்காக தான் வேப்பம்பூ பச்சடி, வேப்பம்பூ ரசம் கண்டிப்பாக வைப்பார்கள், மாங்காய் பச்சடியும் வைத்து சமைப்பார்கள். இந்த உணவை சுவாமிக்கு படையலாக போட்டு, வழிபட வேண்டும். பூஜை, வழிபாட்டை முடித்த பிறகு வீட்டில் உள்ள பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற வேண்டும். அவர்கள் கொடுக்கும் பணத்தை, நமது பணப்பையில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

தமிழ் புத்தாண்டில் வாங்க வேண்டிய பொருட்கள் :​
தமிழ் புத்தாண்டு அன்று புதிதாக உப்பு, மஞ்சள், அரிசி, கற்கண்டு போன்ற பொருட்களை வாங்க வேண்டும். மகாலட்சுமி வாசம் செய்வதாகவும், மங்கல பொருட்களாகவும் கருதப்படும் இந்த பொருட்களை தமிழ் புத்தாண்டு தினத்தில் வாங்கி வீட்டில் வைத்தால் அந்த ஆண்டு முழுவதும் வீட்டில் எந்த குறையும் இன்றி சுபிட்சம் நிலவும் என்பது நம்பிக்கை. வீட்டில் மகாலட்சுமியின் அருளும் நிறைந்திருக்கும். தமிழ் புத்தாண்டு அன்று பசு மாட்டிற்கு அகத்திக் கீரை, கோதுமையால் ஆன உணவுப் பொருட்கள் ஆகியவற்றை உணவாக வழங்கலாம். முடிந்த வரை இருண்டு பேருக்காவது அன்றைய தினம் அன்னதானம் வழங்க வேண்டும்.

2023 ம் ஆண்டில் தமிழ் புத்தாண்டானது மங்கலகரமான வெள்ளிக்கிழமையில் வருகிறது. வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாட்டிற்கு உரிய நாளாகும். இந்த ஆண்டு சித்திரை முதல் நாளில் திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. பெருமாளுக்குரிய முக்கிய விரத நாளான இந்த நாளில் பெருமாளையும், மகாலட்சுமியையும் வழிபட வீட்டில் செல்வ வளம் பெருகும்.

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
admin April 13, 2023
Share this Article
Facebook Twitter Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Previous Article சித்திரை புத்தாண்டு 2023 ஆடை நிறம்
Next Article யாழில் மீண்டும் வீரியமெடுத்துள்ள கொரோனா..! புத்தாண்டில் யாழ்ப்பாண மக்களுக்கு பேரிடிச் செய்தி – வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை
Times.lkTimes.lk
Follow US

© 2023 Times Media Network | All Rights Reserved.

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?