தாம் அனைவருக்கும் எரிபொருளை தொடர்ந்து விநியோகிப்பதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமையாளர் குப்தா அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
- Advertisement -
அத்தியாவசிய சேவைகளுக்கே எரிபொருள் விநியோகிக்கப்படும் என நேற்றைய தினம் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
- Advertisement -
இந்த நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்தக் கட்டுப்பாடுகளின் கீழ் நேற்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இந்த நிலையில், தாம் அனைவருக்கும் எரிபொருளை தொடர்ந்து விநியோகிப்பதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமையாளர் இன்று தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் எங்களுக்கு பொருந்தாது. அனைத்து வாகனங்களுக்கும் டோக்கன் முறை மூலம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பெரும் ஏக்கத்திற்கு உள்ளான மக்கள் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் பெற முண்டியடித்து வருகின்றனர்.